search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபரை கொலை"

    வாலிபரை கொன்ற 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

    குள்ளனம்பட்டி:

    பழனி அடிவாரம் பகுதியில் கடந்த ஜூன் மாதம் செந்தில்குமார் என்பவரை 4 பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்தது. இது தொடர்பாக பழனி அடிவாரம் பாட்டாளி தெருவை சேர்ந்த பூபாலன், சவுந்திரபாண்டி, குரும்பபட்டியை சேர்ந்த பாலகிருஷ்ணன், கோபிநாத்துர்கா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்ததால் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் பரிந்துரைத்தார். அதன்படி 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். இதனையடுத்து போலீசார் 4 பேரையும் மதுரை ஜெயிலில் அடைத்தனர்.

    ×